தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில் ரோடு ஷோ நடத்தி எட்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மாலை சென்னை திரும்புகிறார்.


Coimbatore: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இன்று மதியம் கோவை விமான நிலையத்திற்கு வரும் விஜய், கொச்சின் – சேலம் ஆறுவழிச் சாலை மார்க்கமாக அவிநாசி நோக்கிப் புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் U டர்ன் எடுத்து மீண்டும் அதே வழியில் பைபாஸ் திருப்பூர் சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கொச்சின் – சேலம் ஆறுவழிச்சாலை வழியாக பெருமாநல்லூர் நான்கு ரோடு சந்திப்பிற்குச் செல்லும் விஜய், மாலை 4 மணிக்கு வாகனத்தில் இருந்தபடி எட்டு வேட்பாளர்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்.

பின்னர் பெருமாநல்லூர் – திருப்பூர் சாலையில் பூலுவபட்டி வரை சென்று U டர்ன் எடுத்து மீண்டும் பெருமாநல்லூர் நால்வழிச்சாலை வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து சேலம் – கொச்சின் ஆறுவழிச்சாலை வழியாக கோவை விமான நிலையத்திற்குத் திரும்பும் விஜய், இன்று மாலை சென்னைக்குப் புறப்படுகிறார்.

விஜய் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...