கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி, சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.



இந்த சிறப்பு முகாமானது மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் யாத்திரை செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.



இதில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.



இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்தியோகமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...