தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்

தாவர நலம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற சிறந்த புகைப்படம், சிறந்த ஓவியம் மற்றும் சிறந்த கட்டுரை எழுதிய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த முதுநிலை மாணவர்களுக்கு துணைவேந்தர் கீதாலட்சுமி பரிசுகளை வழங்கினார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், உலக தாவர நல தின நாளினை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையம் சார்பாக உலக தாவர நல தினம் கடந்த 12.05.2024 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இத்தினத்தன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்து, தாவர நலத்தின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக எதிர்கால வேளாண்மையில் நாம் எதிர்நோக்கி உள்ள பல்வேறு சவால்களான காலநிலை மாறுபாடு, புதிய பூச்சி மற்றும் நோய்கள், பாதுகாப்பான வர்த்தகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நம் தொழில்நுட்ப உத்திகளை அதற்கு ஏறாற்போல் உருவாக்க வேண்டியது நமது கடமையாகும் என்று எடுத்துரைத்தார்.

முன்னதாக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மூ.சாந்தி, தினத்தினுடைய சிறப்பு மற்றும் நோக்கம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். தேர்வு கண்காணிப்பாளர் முனைவர் வெ.யாலசுப்ரமணி, தாவர நலம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டு அவற்றை சிறந்த முறையில் பேணிக்காப்பது குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக துணைவேந்தர் தாவர நலம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற சிறந்த புகைப்படம், சிறந்த ஓவியம் மற்றும் சிறந்த கட்டுரை எழுதிய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த முதுநிலை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பன்னாட்டு வலைதள பயிலரங்கம் நடந்தன. அதில் முனைவர் B.M. பிரசன்னா தாவர நலம் இந்தியா போன்ற நாடுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து கருத்துக்களை மாணவர்களோடு கலந்துரையாடினார். முனைவர் T.சோனை ராஜன் பாதுகாப்பான மற்றும் சரியான அளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வினை மாணவரிடம் எடுத்துரைத்தார். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் Y.G.பிரசாத் அவர்கள் பேசுகையில் பருத்தியில் மேம்படுத்தப்பட்ட கணினி வகை தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து முனைவர் ஆலிஸ் சுஜிதா பேசுகையில் தாவரக் கட்டுப்பாடு விதிகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மா.முருகன் வரவேற்புரை ஆற்றினார். பயிர் நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் K.அங்கப்பன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.



இந்நிகழ்ச்சியில் சுமார் 450க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...