உடுமலையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் 250 கிலோ பறிமுதல்

உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் நடத்திய ஆய்வில் இரண்டு கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்திரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படியும் உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் உடுமலை நகரப் பகுதியில் மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது மாம்பழம் மொத்தமாக மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகளில் மாம்பழங்கள் செயற்கையாக ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ எடையுள்ள அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.



கோடை காலத்தில் பொதுமக்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்ணும் பழமாக மாம்பழம் இருப்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.



மேலும் ரசாயன முறையில் செயற்கையாக மாம்பழங்களை பழக்க வைத்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...