கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம் - வரும் மே 31ஆம் தேதியுடன் முடிவு

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20% சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்ட்பட்டவர்கள் பலன்பெற்றுள்ளனர் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக கேஎம்சிஹெச் தற்போது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவியை அறிமுகம் செய்துள்ளது. மிகத்துல்லியமான அறுவை சிகிச்சைக்கு இந்த அதிநவீன ரோபோ இயந்திரம் உதவுகிறது. மேலும் மென்மையான திசுக்களைப் பாதுகாத்து நோயாளி விரைவில் குணமடையவும் உதவிகரமாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இந்த கருவியானது அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் செய்துமுடிக்க உதவுகிறது. மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவை இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் முக்கிய பலன்களாகும்.

நோயாளி விரைவில் குணமடைவதால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகும். இந்த ரோபோட்டிக் கருவியைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன 3டி சி ஆர்ம் (3D C-Arm) என்ற இமேஜிங் கருவியையும் கேஎம்சிஹெச் அறிமுகம் செய்துள்ளது. எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனைக் கொடுக்கும். எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்து முடித்திட இது உதவுகிறது.

முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. மேலும் ஸ்குரூக்கள், இம்பிளாண்டுகள் முதலானவற்றை துல்லியமாகப் பொருத்தி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவியாய் உள்ளது. இந்த அதிநவீன இயந்திரங்கள் அளிக்கும் அனுகூலங்களை நோயாளிகள் எளிதில் பெற்றுப் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஒரு ரோபோட்டிக் மூட்டு மாற்று முகாமிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. 2024 மார்ச் 1 முதல் மே 31-ம் தேதி வரை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் இம்முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20% சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.

இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்ட்பட்டவர்களுக்கு ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து பலன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள733 9333 485 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...