அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை – போக்குவரத்துத் துறை விளக்கம்

வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.


கோவை: நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற காவலர் ஆறுமுகப்பாண்டி, காவலர் சீருடையில் இருப்பதால் பயணச் சீட்டு எடுக்க முடியாது என்று கூறி போக்குவரத்துத் துறை ஊழியர்களான ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் போக்குவரத்து துறை சார்பில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் பயணித்தின்போது காவலர்கள் கட்டாயம் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...