உடுமலை அருகே சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தடுப்பணையால் பாதிப்பு இல்லை என்று கூறுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதை கண்டிக்கின்றோம். இதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனென்றால் அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், 120 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் ஒரு டி.எம்.சி தண்ணீர் தான் எடுக்கப்படுகிறது. இதனால் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். பழைய மற்றும் புதிய ஆயகட்டுப்பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் அறிக்கை அளித்து உள்ளனர். அதிகாரிகளின் பதிலானது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற நிகழ்வாகும். தடுப்பணை கட்டும் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கேரள மாநில சோதனை சாவடிகளில் தடுக்கின்றனர்.



சட்டவிரோதமாக அணை கட்டுவதால் தான் ஆய்வு செய்ய மறுக்கின்றனர். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறாததும் தெரியவருகிறது. தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் அங்குள்ள மரங்களை காப்பாற்றவும் தடுப்பணை கட்டி வருகின்றனர். இதனை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

மேலும் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அணை கட்டுவதை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படுவதுடன் தமிழகத்தில் இருந்து உடுமலை வழியாக கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள், இறைச்சி, போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...