உடுமலை அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் பணி புறக்கணிப்பு போராட்டம்

இரண்டரை ஆண்டுகளாக மாதம் 800 ரூபாய் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி, தங்களது பெயரில் இல்லை. ஒப்பந்த நிறுவனம் வருங்கால வைப்பு நிதியை கையாடல் செய்துள்ளதா? என்று தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் உடுமலை மற்றும் மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தூய்மை மற்றும் துப்புரவு பணிக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மூன்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாற்றி வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுதுதனியார்நிறுவனத்தின் மூலம் பணியாற்றி வருகின்றனர். புதிய ஒப்பந்தத்தில் பணியில் சேர்ந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இவரது ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் உள்ளது.



இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இவர்களது ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதியாக ரூ.800 மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது அந்த வருங்கால வைப்பு நிதி கணக்கில் இவர்கள் பெயரில் எந்த பணமும் இல்லை. அந்த நிறுவனம் இவர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை வருங்கால வைப்பு நிதி கணக்கில் கட்டியதா? அல்லது கட்டாமல் கையாடல் செய்துள்ளதா? என தெரியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே தங்களுக்கு நியாயமான முறையில் சேர வேண்டியவருங்கால வைப்பு நிதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு இவர்களது விஷயத்தில் தலையிட்டு இவர்களுக்கு சேர வேண்டியவருங்கால வைப்பு நிதி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா காலகட்டத்திலும் உயிரை பணயம் வைத்து விடுப்பு எடுக்காமல் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றினர். தங்களது கோரிக்கையை ஏற்க அரசு மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் முன் வருவதில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உடுமலை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...