ராஜஸ்தான் மாணவர் செயற்பாட்டாளர் படுகொலைக்கு நீதி கேட்டு கோவையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

னைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ககன்தீப் சிங் படுகொலைக்கு நீதிக்கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் வே.வசந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ககன்தீப் சிங் கடந்த 15.05.2024ஆம் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவர் பெருமன்ற தோழர்களும், ஊர் மக்களும் ஆரம்பத்திலிருந்தே இது கொலை என்று கூறிவந்த நிலையில் காவல்துறையினர் விபத்து என்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தோழர் ககன்தீப் சிங்கை திட்டமிட்டு தலையில் தாக்கி படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ககன்தீப் சிங் உடலில் விபத்திற்கான வேறு எந்த காயங்களும் இல்லை. தோழர் ககன்தீப் சீங் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழர் ககன்தீப் சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு மாணவர் செயற்பாட்டாளர். மாணவர் போராட்டங்களில் முன்னணியில் இருந்தவர்.



ஞானஜோதி கல்லூரியை அரசு கையகப்படுத்தியதில் இவரது பங்களிப்பு மகத்தானது. ககன்தீப் சிங் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் வே.வசந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் பெருமன்ற முன்னாள் மாநிலத் தலைவர் குணசேகர், மாநில துணைத் தலைவர் சினேகா, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் என்.ஜீவானந்தம், எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...