குடியிருப்புகளின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - குடியிருப்பு வாசிகளுக்கு கோவை மாநகரக் காவல் துறை எச்சரிக்கை

குடியிருப்புகளில் அசோசியேஷன் மூலமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் அல்லது மின்சார வாரிய ஊழியா்களைக் கொண்டு அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரக் காவல் துறை சார்பில் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை சரவணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டியில் ராமன் விஹார் என்ற குடியிருப்பில் உள்ள பூங்காவில் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வியோமா பிரியா (8), சிறுவன் ஜெயான் ரெட்டி (6) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் தேங்குவதற்கும், சுவா்கள் மற்றும் மின்சாரக் கம்பங்களில் நீா்க்கசிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் சேதாரங்கள் காரணமாக மின்சார ஒயா்கள் துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்து மின் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேபோல, சரியாக பராமரிக்கப்படாத கட்டடங்கள், காய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் ஆகியவை மழைக் காலங்களில் மேலும் சேதமுற்று கீழே விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

குடியிருப்புவாசிகள் தங்கள் குடியிருப்புகளில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள் மற்றும் பிற கட்டடங்களில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா அல்லது இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். மின்சார ஒயா்கள் சேதமின்றி உள்ளதா என்பதையும், மழைக் காலங்களின்போது மின் கசிவு ஏற்படும் வாய்ப்பை தவிர்ப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

மேலும், தங்கள் குடியிருப்புகளில் அசோசியேஷன் மூலமாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் அல்லது மின்சார வாரிய ஊழியா்களைக் கொண்டு அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...