கொங்கு மண்டலத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அடுத்த ஒருவாரம் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை குறித்தும், வரவுள்ள பருவமழை குறித்தும் அண்மையில் கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று (25.4.2024) முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும். கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஆங்காங்கே மிதமான வெப்ப சலனம் மழைக்கு அடுத்த ஒரு வாரம் வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது என்று இந்த மாத இறுதியில் அறிவித்தாலும் உண்மையில் மழை அடுத்த 10 நாட்களுக்கு அவ்வளவாக இருக்காது. இதற்குக் காரணம் எம் ஜே ஓ வங்கக் கடலிலிருந்து பசிபிக் கடலை நோக்கி நகர்வதால் இந்திய நிலப்பரப்பில் மழையின் தாக்கம் குறைவாக காணப்படும்.

இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து விடும் என்று நம்ப வேண்டாம். சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...