கோவையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

கோவையில் 27 வயதான வாலிபர் நட்பு மூலம் ஈர்த்து 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது காரணமாக 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 27) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் செந்தில் அந்த சிறுமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செந்திலை கைது செய்தனர். 

இது தொடர்பாக கோவையில் உள்ளபோக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று மே.24 தீர்ப்பு கூறப்பட்டது. 

அதில் குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ4 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து செந்திலை போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...