கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் IPS சம்பவ இடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


coimbatore: சூலூர் அருகே கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுமி, கண்ணம்பாளையம் குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு இன்று நடைபெற்று முடிந்துள்ளது.



இந்த சம்பவத்துக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக காவல் துறைத் தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் கோவைக்கு நேரில் வருகை தந்தார்.



சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் குளம் பகுதிக்குச் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.



அப்போது, குற்றவாளிகள் எந்த வழியாக வந்திருக்கக்கூடும், சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற டிஜிபி, இவ்வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...