சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோட்டில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, இரண்டு பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், சூலூர் அடுத்துள்ள சிறுவாணி டேங்க் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (வயது 44). இவர் கடந்த 18-ந் தேதி உடுமலைப்பேட்டை அருகே உள்ள அவரது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றிந்தார். 

பின்னர் அவர் மே.24 மாலை 4 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உள்ளே சென்று பார்த்தார். 

அப்போது அங்கு பீரோவில் இருந்த தங்க செயின் மற்றும் மோதிரம் என 2 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. 

பின்னர் இது குறித்து ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் மே.24 சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...