சரவணம்பட்டியில் மின்சாரம் தாக்கி இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்; மூவர் மீது வழக்கு பதிவு

கோவை சரவணம்பட்டியில் இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சம்பவத்தின் காரணமாக மூன்று நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான, 'ராமன் விஹார்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 

இங்குள்ள பூங்காவில், ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி மகன் ஜெயான் ரெட்டி, 6, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் மகள் வியோமா பிரியா, 8, ஆகிய இருவர், கடந்த 23ம் தேதி சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். 

பாலசுந்தர் புகாரில் சரவணம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் அஜாக்கிரதையாக விபத்தை ஏற்படுத்தி, மரணம் விளைவித்தது தெரிந்து.

பின் குடியிருப்பின் எலக்ட்ரீஷியன் திண்டுக்கலை சேர்ந்த சிவா (29), ஒப்பந்ததாரர்கள் சரவணம்பட்டியை சேர்ந்த முருகன் (45), வடவள்ளியை சேர்ந்த சீனிவாசன் மீது 304 'ஏ' பிரிவின் கீழ் வழக்கு மே.25 பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...