உடுமலை அருகே சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு - தாராபுரத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நேரடியாக 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும், மறைமுகமாக 25,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 110 குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.



தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் விவசாய பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வேலு சிவகுமார் முன்னிலையில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கேரளா அரசை கண்டித்தும், மத்திய மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட விசிகவினர், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...