குண்டடம் அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி பலி - 3 பேர் மீது வழக்கு

நல்லூரில் முள்புதர்களை அகற்றி தோட்டத்தில் போட்டது தொடர்பான தகராறில் சண்முகம் என்பவரின் குடும்பத்தினர் பழனிசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அருகே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டடம் அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமிகவுண்டர். இவரது மகன் பழனிசாமி(58). விவசாயியான இவரின் நிலத்தில் நேற்று, மதியம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம்(35) என்பவர் முற்புதர்களை அகற்றி போட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு வந்த பழனிசாமி, எனது நிலத்தில் ஏன் முற்செடிகளை போடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதே நேரம் அங்கு வந்த சண்முகத்தின் தந்தை குப்புசாமி, தாய் வள்ளியாத்தாள்(55) ஆகியோரும் பழனிசாமியுடன் தகராறு செய்துள்ளனர். தகராறு கைகலப்பாக மாறவே இரு தரப்புக்‌கும் இடையே தள்ளுமுள்ளு ஏறபட்டு பழனிசாமியை சண்முகம் தரப்பினர் தடியைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. இதில் பழனிசாமி கையில் ரத்த காயம் ஏற்பட்டு பதற்றத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

பின்னர் அவரை அவரது மனைவி கைத்தாங்கலாக அழைத்துச் சென்‌று வீட்டில் படுக்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்தில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பழனிசாமியின் மனைவி யசோதா குண்டடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சண்முகம், அவரது தந்தை குப்புசாமி, தாயார் வள்ளியம்மாள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நிலத்தில் முள் போட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பினால் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி இறந்த சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்‌தியுள்ளது.

Newsletter

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...