கோவை காந்திபுரம் சிக்னலில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

18 வயது ஆகாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தரக்கூடாது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு வாகனம் வாங்கி தர வேண்டும். இல்லை என்றால் பெற்றோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் சிக்னலில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் சைபர் கிரைம் குறித்து இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் ரோஹித் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேஜிக் ஷோ நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முகத்தில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தலைக்கவசம் அணிந்து மேஜிசியன் தயா வாகனத்தை ஓட்டி தலைக்கவசம் அணிவது கட்டாயம், மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது என்று காந்திபுரத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை விழிப்புணர்வு செய்தார்.



அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கண்ணைக் கட்டிக் கொண்டு கூட வாகனம் ஓட்டலாம், ஆனால் ஹெல்மெட் அணியாமல், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஒட்டக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டினால் நமது உயிர் நமது கையில் இல்லை என்று கூறினார்.

தற்போது இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டு வருகிறார்கள். 18 வயது ஆகாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தரக்கூடாது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு வாகனம் வாங்கி தர வேண்டும், இல்லை என்றால் பெற்றோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

கோவை மாநகரில் சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுபவர்கள் மீது வாகனத்தை இயக்க முடியாத அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

தனியார் கேஎம்சிஎச் மருத்துவமனையில் திருட முயற்சித்ததாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் வந்தவர்கள் தொடர்புடையவர்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகிறோம். நேரடியாக வாகன தணிக்கையின் போது போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா? என்ற கோணத்திலும் சோதனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...