கட்சி பிரதிநிதி போல மாவட்ட ஆட்சியர் பேசுவதாக மனுதாரர் புகார்!

கோவையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதித்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலால் மனு அளிக்க வந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 153 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூலடப்பட்ட கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.



இக்கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் பகுதி பொதுமக்கள் மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுவினை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இராமநாதபுரம் 75-வது வார்டு மணிகண்டன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கோவையில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 



ஆனால், மூடப்பட்ட மதுபானக்கடைகளில் தொடர்ந்து மறைமுகமாக மது விற்பனை நடந்து வருகிறது. இராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடை, நஞ்சுண்டாபுரம், புளியகுளம், 80 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து மது விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளித்த போது, "மூடப்பட்ட மதுபானக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுபானக்கடைகளை திறந்தால் தான் சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்" என ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 



மாவட்ட ஆட்சியரின் இந்த பதில், கட்சி பிரதிநிதி போல உள்ளது என புகார் தெரிவித்தார்.

இதேபோல ஒண்டிப்புதூர், காளப்பட்டி, ரத்தினபுரி, பாப்பநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புதிதாக மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம், மதுபானக்கடைகளை திறப்பதில் மட்டும் முனைப்புடன் செயல்படுவதாக புகார் தெரிவித்த பெண்கள், மதுபானக்கடைகளினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மதுபானக்கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர். மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரேநாளில் ஏராளமான பகுதி பொதுமக்கள் நடத்திய போராட்டங்களினால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...