திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பெருமிதம்

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஈஸ்வரசாமி தொடர்ந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த ஈஸ்வரசாமி மற்றும் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது உள்ளிட்ட கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், இலவச பேருந்து பயண திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாலும் முதல்வரின் முத்தான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் ஈஸ்வரசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...