கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபாம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.


கோவை: தமிழின தலைவரும், முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் காலை 8.00 மணியளவில் தேசிய அளவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற செல்வி மிர்த்திகாவுக்குஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபார்ம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.



2023 - 2024 கல்வியாண்டில் வெள்ளலூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 வது மற்றும் 12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத் தொகையாக வழங்குதல், மேட்டூர் திமுக-வின் தமிழ் மன்றத்திற்கு LED TV வழக்குதல் போன்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர், மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், 100 வார்டு செயலாளர் மேட்டூர் மாணிக்கம், வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் டேனியல் ஜேசுதாஸ், 95 வது வட்ட கழக செயலாளர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...