வைகாசி அமாவாசையை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு

வைகாசி அமாவாசையை முன்னிட்டு நொய்யல் படித்துறையில் காலை முதலே திரண்ட பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு எள், அரிசி, பழம் வைத்து புரோகிதர் முன்னிலையில் திதி கொடுத்தனர். பின்னர், பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.


கோவை: வைகாசி அமாவாசையை முன்னிட்டு இன்று ஜூன்.6 கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

அதன்படி பேரூர் நொய்யல் படித்துறையில், வைகாசி அமாவாசையை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

பின்னர், ஏழை எளியோருக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர். தொடர்ந்து, பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...