கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து மூவரை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு குற்றவாளிகளில் ஒருவரான கார்த்திக் மீது கோவை மத்திய சிறையில் சக கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், மூவரை வேறு சிறைக்கு மாற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கைது செய்யப்பட்ட கார்த்திக், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது வலது கை மற்றும் காலில் காயமடைந்ததால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை கார்த்திக் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை மத்திய சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், நந்து என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட நவீன்குமார், ஜீவா என அழைக்கப்படும் ஜீவானந்தம், மகாவீர் என்ற பெயரில் அறியப்படும் மகாதேவன், கணேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், முன்னெச்செரிக்கை நோக்கத்திலும், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் மூன்று கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நவீன்குமார் வேலூர் மத்திய சிறைக்கும், ஜீவானந்தம் கடலூர் மத்திய சிறைக்கும், மகாதேவன் திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் சிறை நிர்வாகத்தால் பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...