வாலாங்குளம் ஜங்சன் அருகே பைனாஸ் நிறுவன ஊழியரிடம் முகவரி கேட்பது போல் நடித்து பணம் பறித்த நபர் கைது

உக்கடம் வாலாங்குளம் ஜங்சன் அருகே பைக் ரிப்பேர் ஆகி நின்றுக்கொண்டிருந்த வைரவமூர்த்தி என்பவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து கத்திமுனையில் ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையை அடுத்த பழையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வைரவமூர்த்தி (37). இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஜூன்.6 பைக்கில் தனது நண்பர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் உக்கடம் வாலாங்குளம் ஜங்சன் அருகே சென்றபோது, பைக் ரிப்பேர் ஆனது. உடனே வைரவமூர்த்தியின் நண்பர் மெக்கானிக்கை அழைத்து வர சென்றார்.

அப்போது தனியாக நின்றிருந்த வைரவமூர்த்தியிடம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் குனியமுத்தூருக்கு எப்படி செல்ல வேண்டும் என முகவரி கேட்டுக்கொண்டே அருகே வந்த அவர் திடீரென கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த 1000 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

பின்னர் இது குறித்து வைரவமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், பணம் பறித்தது தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த தர்மராஜ்(30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...