பொள்ளாச்சியில் புதிய உள்நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் புதிதாக கட்டப்பட்ட உள்நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் நீட் விலக்கு பெற தமிழக அரசானது சட்ட போராட்டம் தொடர்ந்து நடத்தும் என அவர் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 72 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முறையில் உள் நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிட திறப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறவேண்டும் என்ற அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் கட்டணப்பிரிவு வசதி முதல் முறையாக பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாய் கடி, மற்றும் பாம்பு உள்ளிட்ட விஷக்கடிகளுக்கான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் லோடிங் டோஸ் எனப்படும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஏராளமான குளறுபடி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், தற்போது வட மாநிலங்களிலும் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நீட் விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...