அா்த்தநாரிபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அா்த்தநாரிபாளையத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே அா்த்தநாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (64), விவசாயி. இவா், அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று ஜூன்.10 தீா்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி ஜி.குலசேகரன் அளித்த தீா்ப்பில், பெருமாளுக்கு ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2,000 அபராதமும், மூன்றாவது பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததோடு, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...