கோவை புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.


கோவை: கோவை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று துவங்கியது.



அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும், பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய

பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்கள், அசல் ஜாதிச் சான்றிதழ், இரண்டு நகல்கள், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை, www. gascwcbe.ac.in என்ற இணையதள முகவரி யில் தெரிந்து கொள்ளலாம்.



கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், காலை 9:30 மணிக்கு கலந்தாய்வு துவங்கும். மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள், கல்லூரிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவியருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர், மட்டுமே வர வேண்டும். சேர்க்கை கிடைத்தவுடன், அன்றே கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...