ரேஷன் கடைகளில் தொடரும் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு - தரம் சரியில்லாததால் திருப்பி அனுப்பியதாக கோவை ஆட்சியர் விளக்கம்

டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று கோவை ஆட்சியர் பதிலளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது மாதமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,536 நியாய விலைக் கடைகள் உள்ளன. மாதந்தோறும் 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மே மாதம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவியது.

தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் டெண்டர் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. மே மாதத்துக்கான பருப்பு, பாமாயில் பொருட்களை இம்மாதம் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதே போல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மே மாதத்துக்கான பொருட்களை ஊழியர்கள் வழங்கினர். இருப்பினும் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு தொடர்வதால் கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகுப்பு பலருக்கு வழங்கப்பட வில்லை.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான ஒதுக்கீடும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை நுகர்வோர் அமைப்பினர் கூறும் போது, "பொதுவாக கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முதல் வாரமும், மூன்றாவது வாரமும் பொருட்கள் குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்படும். பெரும்பாலான ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் சரிவர கோவை மாவட்ட ஆட்சியர் விநியோகிக்கப்படுவதில்லை.

கண்காணிப்பு குழு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை. மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் சரிவர நடப்பதில்லை. மாதந்தோறும் குறித்த நேரத்தில் அனைத்து பொருட்களும் சிறந்த தரத்துடன் திருப்பி விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும் போது, டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...