தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது

கோவை கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற எம்.டி.ஏ மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவை எம்.டி.ஏ. மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் சார்பில், கோவை கிராண்ட் ஹோட்டலில் இன்று ஜூன்.13 நடைபெற்ற 9-வது பொதுக்குழுவில் சமூக சேவைக்கான விருதுகள் தமுமுகவின் சேவைகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

எம்.டி.ஏ. அசோசியேசன் தலைவர் பிரோஸ் காண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) கோவை மத்திய மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவ பணிகள், ரத்ததான முகாம்கள், ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ உதவிகள், கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு தமுமுகவை கவுரவப்படுத்தி இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கோவை சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம் அவர்கள், மாநில தொண்டரணி துணைச் செயலாளர் ஷகீர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஆசிக் அகமது, மருத்துவ சேவையின் மாவட்ட செயலாளர் சபீர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் இப்ராஹிம், ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர் கே ஜி ராமமூர்த்தி, மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...