நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு மாணவர்கள் நலனுக்கான தேர்வு இல்லை. நீட் தேர்வு தொடர்பான குளறுபடி தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி தேர்தல் முடிவுகள் வெளியிட்டு உள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (14.06.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை வியாபாரம் ஆக்க கூடாது என வலியுறுத்தி பாஜ அரசை கண்டித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.



இது குறித்து மாநில துணை தலைவர் சினேகா கூறியதாவது, நீட் தேர்வு மாணவர்கள் நலனுக்கான தேர்வு இல்லை. நீட் தேர்வு தொடர்பான குளறுபடி தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி தேர்தல் முடிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

மேலும், நீட் தேர்வில் 400 மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ கல்வி கிடைக்காத நிலை உள்ளது. நீட் தேர்வு மூலமாக மனப்பாடம் கல்வி முறை மாற்றம், தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டண கொள்ளை தடுக்க முடியும் என பாஜ கூறிய நிலையில் அதனை செய்ய முடியவில்லை. இந்த நீட் தேர்வு சமமற்ற தேர்வு.

இந்த நுழைவு தேர்வு ஏழை மாணவர்களுக்கு கை கொடுக்காது. குளறுபடிகளுக்கு 1563 பேருக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்பது தீர்வு ஆகாது. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...