பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்றும் வீக்கம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் 48 மணி நேர ஓய்வு அறிவுறுத்தியுள்ளனர்.


Coimbatore: பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் வானதி சீனிவாசன். கோடையின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அவருக்கு காலில் கடுமையான வலியும், வீக்கமும் ஏற்பட்டுள்ளது. வலியின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் தேவையான சிகிச்சை அளித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓய்வின்றி உழைத்ததே இந்த உடல்நலப் பாதிப்புக்கு முக்கிய காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 48 மணி நேரம் அவர் கட்டாயம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தேர்தல் களத்துக்குத் திரும்ப வேண்டும் என பாஜக கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...