ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக ஒண்டிப்புதூர், திறந்தவெளி சிறை மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக ஒண்டிப்புதூர், திறந்தவெளி சிறை மைதானத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...