கேரளாவில் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் லேசான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.


திருவனந்தபுரம்: கேரளாவில் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் இன்று 2-வது நாளாக இன்று அதிகாலையில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.

கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நேற்று காலை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

திருச்சூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.15 மணிக்கு குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி உட்பட பல இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. சில இடங்களில் வீடுகள் குலுங்கி இருக்கின்றன. இந்த நில அதிர்வுகள் சில வினாடிகள் நீடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளை நோக்கி ஓடினர்.

இதேபோல பாலக்காடு மாவட்டத்தின் சாலிசேரி, கக்காட்டிரி, திருமிற்றக்கோடு, எழுமங்காடு, குமாரநெல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அங்கும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த லேசான நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் பதிவாகவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலையிலும் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இன்று காலை 3.55 மணிக்கு நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியும் அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Newsletter

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...