வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Coimbatore: வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட கோர விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, கேரள மாநிலம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 13 பேர் டெம்போ டிராவலர் வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து மீண்டும் கீழிறங்கி வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

மலைப்பாதையின் 13வது கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து வழுக்கி பள்ளத்தில் கவிழ்ந்து, 9வது கொண்டை ஊசி வளைவு நோக்கி சரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் கடுமையாக காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கோடைக்கால சுற்றுலா துவங்கியுள்ள நிலையில், மக்களிடையே இந்த விபத்து பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “விபத்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடையவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...