பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் சாலையில் கவிழ்ந்த முட்டை வேன் - ரூ.2 லட்சம் மதிப்பிலான முட்டை சேதம்

கள்ளகிணறு என்ற பகுதியில் அரசுப்பேருந்தை முந்திச் செல்ல முயன்ற வேன், சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் உள்ள கள்ளகிணறு என்ற பகுதியில் பல்லடத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த முட்டை வேன், அரசு பேருந்து வாகனத்தை முந்தும் போது விபத்து ஏற்பட்டு நடுரோட்டில் முட்டை வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் அரசு பேருந்தில் வந்த பயணிகள் உயிர் தப்பினர்.



ராஜபாளையத்திலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அதன் முன்னால் தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கேட்சரிஸ் வேன் ஒன்றன்பின் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து இந்த வேனை முந்த முயற்சித்துள்ளது.



அப்போது வேனின் ஓட்டுநர் கட் அடித்ததாகவும் இதனால் நடுரோட்டில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.



இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...