கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிலென்ஸ் கண்ணாடி

கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்ப, நுழைவு வாயில் அருகே 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிக்க வருகின்றனர். இதுதவிர ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

அவ்வாறு புகார் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்து அனுப்பும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனங்கள் வெளியே வரும்போது அதே நேரத்தில் பொதுமக்களின் வாகனங்கள் வெளியே வரும்போது வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாகனம் வருவது தெரியவில்லை.



இதனால் அண்மையில் அங்கு விபத்தை தவிர்க்கவும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்பவும் நுழைவு வாயில் அருகே பட்டன் மூலம் இயக்கப்படும் 2 கேட், 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடியும் அமைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...