மாஞ்சோலை எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு கைப்பற்ற வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

வால்பாறையில் மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு எஸ்டேட்டை கைப்பற்றி தொழிலாளர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், வெளியேற்றப்படுமாயின் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறைக்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை எஸ்டேட் விவாகரத்தில் பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை கண்டித்து தமிழக அரசு எஸ்டேட்டை கைப்பற்றி தொழிலாளர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் பி பி டி சி நிர்வாகம் தொழிலாளர்களை எஸ்டேட் இருந்து வெளியேற்றினால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

தேயிலைத் தோட்டத் தொழில் நலிவடைந்து வருவதாகவும் தேயிலை தோட்டத்தில் பணியாற்ற போதுமான தொழிலாளர்கள் இல்லாமல் உள்ளதாகவும் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதால் தொழிலாளர்கள் மாற்று வேலை தேடி வெளிப்பகுதிக்கு செல்வதாகவும் உள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்வு காண 99 வருடம் லீஸ் முடிவடைந்த எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு கைப்பற்றி தொழிலாளர்களுக்கு குறைந்தது 5 ஏக்கர் நிலத்தை வழங்கி மாற்றுத் தொழில் ஏற்படுத்தி தர வேண்டும் 99 வருடம் லீஸ் முடிவடையாத எஸ்டேட்டுகளை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்தும் வண்ணமாக மாட்டுப்பண்ணை காய்கறிகள் பழம் வகைகள் பயிர் இடுவதற்கு இடம் வழங்கிய சுற்றுலா மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார் மேலும் எஸ்டேட் நிர்வாகத்திடம் பழைய ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களை ஷேர் ஹோல்டராக மாற்றி எஸ்டேட்ட நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதில் மாஞ்சோலை எஸ்டேட் 2028 ஆம் ஆண்டு அதன் 99 லீஸ் அக்ரிமெண்ட் முடிவடைவதாகவும் அதற்குள்ளாக pptc நிர்வாகம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி எஸ்டேட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் தெரிகிறது. தமிழக அரசு எஸ்டேட்டை கைப்பற்றி தேயிலைத் தோட்ட தொழிலையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றம் அங்கு பணிபுரிந்த மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கி எஸ்டேட்டை தேயிலை தோட்ட தொழிலை மேன்மைப்படுத்த வேண்டும் என்றும் பி பி டி சி நிர்வாகம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினால் புதிய தமிழக கட்சி சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று பேட்டியளித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...