கோவை கோட்டைமேடு மன்பஉல் உலூம் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த எல்கேஜி குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று ஜூன்.20 முதல் எல்கேஜி வகுப்புகள் துவங்குகின்றன. அதன்படி முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடந்து பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

மேலும் மிக்கி மவுஸ் உடைகள் அணிந்தும் குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிக்கப்பட்டு முகமூடிகள் அணிவிக்கப்பட்டன. மேலும் பள்ளி வகுப்புகள் துவங்கியதும் பெற்றோர்கள் புறப்பட்டு சென்றதை தொடர்ந்து குழந்தைகள் பலரும் அழுவதற்கு ஆரம்பித்து பெற்றோருடன் செல்வதற்கு அடம் பிடித்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள், உதவியாளர்கள் சமாதானப்படுத்தி அமர செய்தனர். சில குழந்தைகள் உற்சாகமாய் சக குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...