கோவை கோட்டைமேடு மன்பஉல் உலூம் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த எல்கேஜி குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று ஜூன்.20 முதல் எல்கேஜி வகுப்புகள் துவங்குகின்றன. அதன்படி முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடந்து பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

மேலும் மிக்கி மவுஸ் உடைகள் அணிந்தும் குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிக்கப்பட்டு முகமூடிகள் அணிவிக்கப்பட்டன. மேலும் பள்ளி வகுப்புகள் துவங்கியதும் பெற்றோர்கள் புறப்பட்டு சென்றதை தொடர்ந்து குழந்தைகள் பலரும் அழுவதற்கு ஆரம்பித்து பெற்றோருடன் செல்வதற்கு அடம் பிடித்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள், உதவியாளர்கள் சமாதானப்படுத்தி அமர செய்தனர். சில குழந்தைகள் உற்சாகமாய் சக குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...