கோவை மாநகராட்சி, சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் இணைந்து கர்பிணி பெண்களுக்கு "அமிர்தானியம்" திட்டம் துவக்கம்

கோவை மாநகராட்சியும், சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து மாநகராட்சி நகர் நல மையங்களுக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறுதானியங்களான பொருட்களை வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக 6 மாதகாலத்திற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டு அதற்கு "அமிர்தானியம்" என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக இன்று (ஏப்ரல் 13) காலை 9.30 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் தலைமையில் எஸ்.எம்.எம்.ஹோம் நகர் நல மையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கும் 250 கிராம் திணை சிறுதானியம் பாக்கெட் சுமார் 100 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி ஆணையர் சிறுதானியங்களின் நன்மைகள், அதனால் உடலில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்து அங்குள்ள அனைவருக்கும் விளக்கி கூறினார்.

இவ்விழாவில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், எஸ்.எல்.எம்.ஹோம் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் இளமதி மற்றும் மருத்துவர் ஹேமலதா, உதவி பொறியாளர் மகேஷ், உதவி செயற்பொறியாளர் கலாவதி, மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...