கோவையில் 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்களை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

கோவையில், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சி.ஜி.டி கல்லூரி, கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் புதிய பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டு, பாலகிருஷ்ணன் அவற்றை தொடங்கி வைத்துள்ளார்.


கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நகரகாக கோவை மாநகர் உள்ளது. கோவை மாநகர எல்லையில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் போக, 57.2 கிலோ மீட்டர் நீளமுடைய 6 மாநில நெடுஞ்சாலைகளும், 77 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய மாவட்ட சாலைகளும் மற்றும் 40.7 கிலோ மீட்டர் நீளமுடைய இதர மாவட்ட சாலைகளும் உள்ளன.

போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்து கோவை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பாதசாரிகள் சுலபமாக போக்குவரத்து மிகுந்த சாலைகளை கடப்பதற்காக அவர்களே உபயோகித்துக் கொள்ளும் வகையில் பெலிக்கான் போக்குவரத்து சிக்னல்களை கோவை மாநகர போலீசார் நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம், பார்க்கேட், 100 அடி சாலையில் 1வது வீதி, சுங்கம் சந்திப்பு, வரதராஜா மில், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கணபதி மூன்றாம் எண் பேருந்து நிறுத்தம், துடியலூர் மற்றும் புரூக்பீல்ஸ் மால் அருகில் என 9 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள்ள் நிறுவப்பட்டுள்ளன.



இதனிடயே அவினாசி சாலையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அருகே, சி.ஜ.டி, கல்லூரி அருகே மற்றும் கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டன. இவற்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று ஜூன்.20 தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...