கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் உயர்வு

கோவை சிறுவாணி அணையில் நீர்மட்டம் கூடுதலாக 9.45 அடியாக உயர்ந்துள்ளது; தென்மேற்கு பருவமழையினால் நீர்வரத்து அதிகரிப்பு.


கோவை: கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டியுள்ள கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐனவரி, பிப்ரவரி மாதங்களில் 20 அடிக்கும் அதிகமாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், கடும் வெயில் காரணமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 8 அடிக்கும் குறைவாக சரிந்தது. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பெய்த தொடா்மழையால், அணையின் நீா்மட்டம் 10 அடிக்கும் மேல் உயா்ந்தது. அதன் பிறகு, மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் மீண்டும் 9 அடிக்கும் கீழ் குறைந்தது. 

இந்நிலையில், கேரளப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்துவருவதால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அதன்படி ஜூன்.20 நிலவரப்படி சிறுவாணி நீா்மட்டம் 9.45 அடியாக உள்ளது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...