கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கம்

கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.


கோவை: கடந்த நிதியாண்டு வரை இந்தியாவில் 38.50 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதில் 95% வாகனங்கள் 2 சக்கர மின்சார வாகனங்கள், 1.67 லட்சம் வாகனங்கள் 4 சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 7,700 வாகனங்கள் மின்சார பேருந்துகள், இந்தியாவில் விற்கப்படும் சுமார் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்களும், சுமார் 70% 2 சக்கர மின்சார வாகனங்களும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. கோவை மாநகரில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைத்திட கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் டாடா பவர் கம்பெனி லிட், மும்பை (TATA POWER FAST CHARGING STATION) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தற்போது கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80% சார்ஜ் வரை செய்ய முடியும்.

இதையும் சேர்த்து மொத்தம் அமையவுள்ள 20 சார்ஜிங் நிலையங்களில் 3 ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைகிறது. அவிநாசி சாலை, வ.உ.சி. பூங்கா பகுதி, வாலாங்குளம் மற்றும் காளப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 சார்ஜிங் நிலையங்களும், சரவணம்பட்டி, புரூக்பீல்டு அருகே அமைந்துள்ள மாநகராட்சி பார்க்கிங் பகுதி, சிங்காநல்லூர், டைட்டில் பார்க், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியகுளம், துடியலூர் ஆகிய பகுதிகளில் தலா 1 சார்ஜிங் நிலையமும் அமைகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...