கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் 1.435 கிலோ கஞ்சா மற்றும் ரூ.4,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, ரேஸ் கோர்ஸ் போலீசார் சோதனை நடத்தி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா தலைமையிலான போலீசார் குழு நேற்று காலை அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, சந்தேகப்படும் வகையில் பையுடன் நின்றிருந்த ஒரு இளைஞரை போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அவரது பையில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பதும், தற்போது பொள்ளாச்சி குளக்கப்பாளையம் பகுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து 1.435 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் ரூ.4,500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...