அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு

தன்னைப்பற்றி உண்மைக்கு மாறான பொய்யான தகவலை கூறியதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், நீங்கள் ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்வி கேட்கலாமா? ரோட்ல போறவங்க வர்றவங்க எல்லாம் ஒருங்கிணைப்பு குழுவா? கோவையை சேர்ந்த ஒருவர் (கே.சி.பழனிசாமி) ஓபிஎஸ் காலத்தில் தான் அதிமுக கட்சியில் உறுப்பினராகவே சேர்ந்தார். உங்களுக்கு விவாத மேடைக்கு ஒரு ஆள் தேவை. அதனால் அவரை வைத்துள்ளீர்கள் என பேசி இருந்தார்.



இந்த விவகாரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இன்று ஜூன்.24 கோவை ஜேஎம்எண் 1 நீதிமன்றத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கே.சி.பழனிசாமி கூறுகையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி உண்மைக்கு மாறான பொய்யான தகவலை கூறி வருகிறார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளேன் என்று தெரிவித்தார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...