கோவையின் அனைத்து மண்டலங்களிலும் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்

வரும் 2 மாதங்களில் 567 OSR நிலங்கள் கோவை மாநகராட்சியின் பெயருக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக இந்த ஆண்டில் 25 OSR நிலங்களை பூங்காக்களாக மாற்ற கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. கோவை மாநகரின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பெரிய பூங்கா OSR நிலம் இருந்த இடத்தில் உருவாக்கிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் 2019ன் படி குடியிருப்பு, வணிகம், தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கு 3,000 சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரை கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் போது அதில் 10% நிலத்தினை திறந்த வெளி நிலமாக (Open Space Reservation Land) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். அதாவது கட்டிடத்தின் மொத்தப் பரப்பில் 10%திறந்த வெளி நிலமாக ஒதுக்கி அதை மாநகராட்சிக்கு வழங்கவேண்டும். இல்லை என்றால் அந்த 10% நிலத்திற்கான வழிகாட்டுதல் விலையை வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் OSR நிலங்களில் அரசு பிற்காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான பூங்கா, விளையாட்டு திடல் போன்றவற்றை உருவாக்கும்.

கோவை மாநகரில் இதுவரை 2232 OSR நிலங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. (அதாவது சுமார் 550 ஏக்கர் நிலம்) இதன் மதிப்பு ரூ.16,000 கோடி இருக்கும். இவற்றில் மொத்தம் 1137 OSR நிலங்களை கோவை மாநகராட்சியின் பெயருக்கு வருவாய் துறை மாற்றிக்கொடுத்துள்ளது. OSR நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த இடங்களில் சுமார் 50% பூங்காவாக/விளையாட்டு மைதானமாக பொது பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.கடந்த 3 ஆண்டுகளில் 400-க்கும் அதிகமான OSR நிலங்களில் வேலிகள் அமைக்கப்பட்டு, அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வரும் 2 மாதங்களில் 567 OSR நிலங்கள் கோவை மாநகராட்சியின் பெயருக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக இந்த ஆண்டில் 25 OSR நிலங்களை பூங்காக்களாக மாற்ற கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. கோவை மாநகரின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பெரிய பூங்கா OSR நிலம் இருந்த இடத்தில் உருவாக்கிட திட்டமிட்டுள்ளது.



இங்கு மரங்கள் நடுவதால் மாநகருக்குள் சுத்தமான காற்று அதிகம் வரும் என இயற்கை ஆர்வலர்கள் நம்புகின்றனர். இங்கு பூங்காக்கள் அமைக்க மாநில அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் 3,000 சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரை கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் போது மொத்தப் பரப்பில் 10 %திறந்த வெளி நிலமாக ஒதுக்கி அதை மாநகராட்சிக்கு வழங்கவேண்டும். இல்லை என்றால் அந்த 10% நிலத்திற்கான வழிகாட்டுதல் விலையை வழங்க வேண்டும் என்ற மாற்று வழிமுறை இருப்பதால், பலரும் நிலத்தை தருவதை விட வழிகாட்டுதல் விலையை தந்துவிட்டு நிலத்தை தக்கவைக்கின்றனர்.

நிலத்தின் சந்தை விலையை (MarketValue) வழிகாட்டுதல் விலை (Guideline Value) குறைவு என்பதால் இம்மாதிரியான நடவடிக்கையை பலரும் பின்பற்றுகின்றனர். இதனால் கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே நகருக்குள் இருக்கும் சூழல் வருவதால், அரசு விதிமுறையை மாற்றம் செய்ய வேண்டும் என தற்போது சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...