வறட்சியால் கோவையை சேர்ந்த விவசாயி தற்கொலை!


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பச்சே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(75). 

அதே பகுதியில் ஆறுமுகத்திற்கு சொந்தமாக 2 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோப்பில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் தனது தோப்பில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்க முடிவு செய்தார். 

தொடர்ந்து, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவழித்து இரு இடங்களில் போர்வெல் அமைத்தார். ஆனால், ஆயிரத்து 300 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் நேற்று மதியம் பூச்சி மருந்து அருந்தினார். இதறிந்த அவரது குடும்பத்தார், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்  வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து, 32-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், வறட்சியினால் கோவையை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...