மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றால அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வர வேண்டாம் - வனத்துறை அறிவிப்பு

கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றால அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை குற்றால அருவியில் குளிக்க வனத்துறையினர் நேற்று தடை விதித்திருந்த நிலையில், அந்தத் தடை இன்றும் தொடர்கிறது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ஜூலை மாதம் நான்காம் தேதி வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலத்தில் தடை போடப்பட்ட நிலையில், தற்பொழுது முன்னதாகவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளது.



கோவை குற்றாலம் அருவி இன்னும் சில நாட்களுக்கு திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் கோவை குற்றாலத்திற்கு வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...