கள்ளக்குறிச்சி விவகாரம்: வெளிப்படைத்தன்மையுடன் திமுக அரசு செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் திமுக அரசு செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.




கோவை, ஜூலை 1, 2024: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசிய வாசன், "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையோடு திமுக அரசு செயல்பட வேண்டும். இதன் பின்னணி யார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் அரசு உள்ளது. இதில் சிபிஐ விசாரணை வைத்திருக்க வேண்டும். ஏன் சிபிஐக்கு அரசு பயப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.



மதுவிலக்கு குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தமாக சார்பில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனால், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் விஷச்சாராயம், கள்ளச்சாராயம் காரணத்தால் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்," என்று குற்றம் சாட்டினார்.

டாஸ்மாக் கடைகள் குறித்து, "டாஸ்மாக் கடைகளை குறைக்கும் எண்ணமில்லை என கூறுவதும், ஏழை எளிய மக்கள் இதில் சிக்கி உயிரிழப்பதும் வேதனையாக உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அபராதம், சிறையிலடைப்பு என அரசு சொல்வது, செயல் வடிவிலும் இருக்க வேண்டும்," என்றார்.

நீட் தேர்வு விவகாரம் பற்றி பேசுகையில், "நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர், இதை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதோடு, தவறுகள் நடக்காமல் இருக்க ஆலோசனை செய்து விதி வகுக்க உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது," என்று கூறினார்.

பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் குறித்தும் வாசன் கருத்து தெரிவித்தார். "செங்கோல், என்பது தமிழகத்தின் பண்டைய கால அரசாட்சியின் நேர்மை, எளிமை, நீதி பரிபாலனம், நேர்மையாக, நியாயமாக, தர்மமாக ஆட்சி செய்வதன் எடுத்துக்காட்டுக்குத் தான் செங்கோல். இந்தியாவில் இது தேவை. மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் இது தேவை என்பதை உணர்த்தவும், தமிழர்களின் பண்பாட்டை உயர்த்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவி பிரதமர் மோடி வரலாறு படைத்து சிறப்பித்தார்," என்று பாராட்டினார்.

இறுதியாக, "பூரண மதுவிலக்கிற்கு உண்டான ஆலோசனைகளை அரசு செய்ய வேண்டும். கண்மூடித்தனமாக டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக பேசுவது அரசுக்கு வழக்கமாகி வருகிறது," என்று வாசன் தனது கருத்துக்களை முடித்துக் கொண்டார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...