கோவை குறிச்சி குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் படையினர்

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு 4-வது சிறப்பு காவல் படையினர் இன்று காலை குறிச்சி குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் கோவை குறிச்சி குளம் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது.



வரும் பருவமழை காலத்திலாவது இக்குளத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் நோக்கத்தில் இன்று காலை 6 முதல் 10 மணி வரை குளத்தை சுத்தப்படுத்தும் பணியானது 4 வது சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 120 காவலர்கள் குறிச்சி குளத்தின் உட்பகுதியில் உள்ள கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்றினர்.

மேலும், குளத்தின் உட்பகுதியில் இருந்த மேடான பகுதிகளை இயந்திரம் மூலம் சமப்படுத்தியும், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள உடைப்புகள் மற்றும் புதர்கள் போன்றவற்றை அகற்றியும், குளத்தின் கரை பகுதியை வலுப்படுத்தியும் குறிச்சி குளத்தை சீரமைத்தனர்.

தொடர்ந்து, குறிச்சி குளம் மீட்பு குழுவின் நிர்வாகிகள் சாமிநாதன் உள்ளிட்டோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இதே போன்று உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அப்பகுதியில் புதர்மண்டிக் கிடந்த வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...