கோவை குறிச்சி குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் படையினர்

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு 4-வது சிறப்பு காவல் படையினர் இன்று காலை குறிச்சி குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் கோவை குறிச்சி குளம் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது.



வரும் பருவமழை காலத்திலாவது இக்குளத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் நோக்கத்தில் இன்று காலை 6 முதல் 10 மணி வரை குளத்தை சுத்தப்படுத்தும் பணியானது 4 வது சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 120 காவலர்கள் குறிச்சி குளத்தின் உட்பகுதியில் உள்ள கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்றினர்.

மேலும், குளத்தின் உட்பகுதியில் இருந்த மேடான பகுதிகளை இயந்திரம் மூலம் சமப்படுத்தியும், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள உடைப்புகள் மற்றும் புதர்கள் போன்றவற்றை அகற்றியும், குளத்தின் கரை பகுதியை வலுப்படுத்தியும் குறிச்சி குளத்தை சீரமைத்தனர்.

தொடர்ந்து, குறிச்சி குளம் மீட்பு குழுவின் நிர்வாகிகள் சாமிநாதன் உள்ளிட்டோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இதே போன்று உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அப்பகுதியில் புதர்மண்டிக் கிடந்த வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...