பொள்ளாச்சி நவமலையில் யானைகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி நவமலை பகுதியில் மூன்று நாட்களாக யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியை அடுத்த நவமலை சாலை ஓரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குட்டிகளுடன் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலையில் மின்வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நவமலை பகுதியில் உள்ள மாணவர்கள் படிப்புக்காக ஆழியார், அங்கலக்குறிச்சி மற்றும் கோட்டூர் பொள்ளாச்சிக்கு சென்று வருகின்றனர்.



இந்நிலையில், ஆழியாரிலிருந்து நவமலை செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக குட்டிகளுடன் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகள் கூட்டம், அங்குள்ள பலா மரங்களில் இருந்த பலாப்பழங்களை உண்டுள்ளது. இதனால் நவமலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் சுழற்சி முறையில் யானைக் கூட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...